• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி: தெற்கு மண்டல உதவி ஆணையர் பங்கேற்பு

April 19, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர் குணியமுத்தூர் பகுதியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் எழுச்சிமிகு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் 44 குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த பேரணியை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் தச்சினாமூர்த்தி அவர்கள் பார்க் அவென்யூ பூங்காவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பேரணி பார்க் அவென்யூ பூங்காவிலிருந்து தொடங்கி சாய் கார்டன், பாலக்காடு பிரதான சாலை, ரைஸ் மில் சாலை மற்றும் அம்மன் கோவில் சாலை வழியாக முன்னேறியது.

பின்னர் ராஜகோபால் நகர்,சக்தி நகர், நிர்மலமாதா கான்வென்ட் சாலை மற்றும் திருநாவுக்கரசு நகர் பகுதிகளைச் சுற்றி, வாசன் ஐ கேர் சந்திப்பில் திரும்பியது. தொடர்ந்து ரங்கசாமி நாயுடு நகர் வழியாகச் சென்று சுப்புலட்சுமி நகர் 6-வது தெரு பூங்காவில் பேரணி நிறைவடைந்தது.
பேரணி நடைபெற்ற வழித்தடம் முழுவதும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் ஹக்கீம், ஒருங்கிணைப்பாளர் நிசார் அகமது மற்றும் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க