• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாகனத்தில் வந்தவர்களிடம் 7 லட்ச ரூபாய் பறிமுதல்

March 21, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆடி காரில் , உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 7 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம்,தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை காந்திபுரம் ஜி.பி.சிக்னல் பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது காரில் வந்த மனோ என்பவரிடம் சோதனை நடத்திய போது,7 இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.அப்பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால்,பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து விசானணை நடத்தி வரும் பறக்கும் படையினர்,உரிய ஆவணங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க