• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

June 9, 2020 தண்டோரா குழு

வழிபாட்டு தளங்களை திறக்க கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கொரானா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வழிபாட்டுத் தளங்களை திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியி சார்பில் சிவத்திரு பிரசன்ன சுவாமிகள் தலைமையில் கோவை கோனியம்மன் கோவில் முன் ஆலயம் திறப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் பேசிய பிரசன்ன ஸ்வாமிகள்,

மதுக் கடைகள் நகைக் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை திறக்கும்போது வழிபாட்டுத் தலங்களை மட்டும் திறக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் மீண்டும் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க