• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையராக இருந்து வருபவர் ராஜீவ் விஜய்நபார். இவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார். மேலும் கடந்த வியாழக்கிழமை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து,ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில்,வருமான வரித்துறை ஆணையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து,39 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க