• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

March 29, 2022

கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுட்டனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் உள்ள 1400 வங்கிகளில் முழுமையாக சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால்,சுமார் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் படிக்க