May 25, 2020
தண்டோரா குழு
ரமலான் பண்டிகையான இன்று
கோவையில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.
உலக முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி , இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில், சிறப்பு தொழுகை நடத்திட அரசு உத்தரவிட்டிருந்தது. வழக்கமாக, ரமலான் பண்டிகை நாளில் மசூதிகளிலும், மைதானத்திலும் அதிகளவில் கூட்டம் காணப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மசூதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில்,ரமலான் பண்டிகையான இன்று கோவையில் உள்ள மசூதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரதலின் பெயரில் பள்ளி வாசல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.