• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூன்று கோவில்களில் தீ வைத்த மர்ம நபர்கள்

July 18, 2020 தண்டோரா குழு

கோவையில் மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டவுன்ஹால் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் மரம் நபர் டயரை எரித்து கோவிலுக்குள் வீசும் சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரையில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறை விசாரணையில் தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் இதே போல ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.மேலும் நல்லாம்பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் உள்ள பழைய துணிகள் மற்றும் பழைய பொருட்களை மர்ம நபர்கள் எரித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன் கோவில் முகப்பில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இன்று மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து ,கோவையில் இன்றைக்கு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க