• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்

November 5, 2019 தண்டோரா குழு

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையறை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியிலுள்ள மின்சார் வாரிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 1998க்கு முன்பு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 2008க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலுயாக ரூ.380வழங்க வேண்டும், 2008க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங்மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யபட்டனர்.

மேலும் படிக்க