• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மாணவர்களுக்கான சாகச விளையாட்டுகள் துவக்கம்

September 23, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சாகச விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதனை ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளி தலைமை ஆசிரியை உமா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இதுகுறித்து அவர் பேசுகையில்,

ஜி.ஆர்.ஜி கல்விக்குழுமம் இது போன்ற புதுவிதமான முயற்சிகளைக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் பள்ளி மாணவ மாணவியர்கள் படிப்பு மட்டுமல்லாமல் இதுபோன்ற சாகச விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதால் அவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்றார்.

மேலும், ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்காக துவங்கப்பட்ட இந்த சாகச விளையாட்டுகள் இனி ஆண்டுதோறும் நாங்கள் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம்.அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்வுகளை பள்ளிக் குழுமத்தின் மூலம் நிகழ்காலங்களில் மாணவர்களுக்காக கொண்டு வருவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் நடத்தப்படும் இந்த சாகச விளையாட்டுகளானது மாணவர்களின் மனதிற்கும், உடலுக்கும் வலிமையைத் தரக்கூடிய வகையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் தலைமையிலான குதிரை சவாரி (HORSE RIDING), விஞ்ஞான அறிவினை மேம்படுத்தும் வகையிலான விமானங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளடக்கிய செயல்பாடுகள் குறித்து ஏரோமாடலிங் (AEROMODELLING) மற்றும் வில்வித்தை (DISCOVER THE THRILL OF ARCHERY) போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் 5 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.

இறுதியில், விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியை உமா சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தற்போது வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளி இந்த முன்முயற்சியின் மூலமாக பல்வேறு மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க