• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்

September 2, 2020 தண்டோரா குழு

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணங்கள் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் பேனர்கள் வைக்கப்பட்டன.

கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரியின் சார்பில்(VLB) முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் நன்றிகளை நிலையான வாக்குகளை அள்ளி தருவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.அதே போன்று வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே மாணவர்களின் கல்விக் கடவுள் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க