• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல்முறையாக பிரனேனியா -30 என்ற நோய் எதிர்ப்பு மாத்திரை அறிமுகம்

July 8, 2020 தண்டோரா குழு

கோவையில் முதல்முறையாக பிரனேனியா -30 என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளை கோயமுத்தூர் ஹோமியோபதி மருத்துவர்கள் அசோசியன சார்பில் இன்று முதல் கொடுக்கத் துவங்கினர்.

கோவை வேலாண்டிபாளையம் பெரிய காணிக் கோனார் தெரு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் கோயமுத்தூர் ஓமியோபதி மருத்துவர்கள் அசோசியேசன சார்பாக 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இன்று கொடுக்கப்பட்டது.ஹோமியோபதி மருத்துவர்கள் அசோசியேசன் சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளான அர்சானிக்கம் ஆல்பம் -30 என்ற மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு முதல் முறையாக பிரனேனியா -30 என்ற மாத்தைகள் இன்று முதல் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

முதல் கட்டமாக வேலாண்டிபாளையம் பகுதியிலும் , கோவைப் புதூர் பட்டாலியன்களுக்கு 2000 பேருக்கு இந்த நோய் எதிர்ப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. சென்னையில் மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்ட பிரனேனியா -30 ( இம்மின் பூஸ்டு -2) என்ற மாத்திரை தற்போது கோவை பகுதியில் ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கொடுக்க துவக்கி உள்ளனர். இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள் யாருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களின் ஆய்வு குறிப்பிடுவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பெரிய கானிக் கோனார் தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சமூக இடைவெளிவிட்டு அப்பகுதி மக்களை அமரவைத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க