• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை

June 12, 2018 தண்டோரா குழு

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரி,கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கும்,காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க கோரியும்,ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த கோரியும்,இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக அவ்வமைப்பினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது,இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க