• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து முதாட்டியிடம் செயின் பறிப்பு

July 8, 2019

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து முதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி முருகாத்தாள் (69). இவர் நேற்று காலை கடைக்கு சென்றுவிட்டு சுந்தராபுரம் மாச்சம்பாளையம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் முருகாத்தவிடம் முகவரி கேட்பது போல் பேசி உள்ளனர். அப்போது திடிரென அவர் கழுத்தில் அணிந்திரந்த 4 சவரன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

மூதாட்டி கூச்சலிட்டதை அடுத்து செயினை பறித்தவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். சம்பவம் தொடர்பாக முருகாத்தாள் கொடுத்த புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க