• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முகக்கவசத்துடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

August 12, 2020 தண்டோரா குழு

கோவையில் வரும் 15-ம் தேதி நடக்கும் 74வது சுதந்திர தின விழாவையொட்டி காவல்துறையின் அணிவகுப்பு ஒத்திகையில் அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினவிழா வஉசி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தவிழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.இதனை தொடர்ந்து சுதந்திர தினவிழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை போலீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

காவல் ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்,தலைமையில் ஒத்திகை தினந்தோறும் காலை,மாலை வேளைகளில் நடைபெற்று வருகின்றது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து காவலர்களும் முக கவசம் அணிந்தும், ஒன்றரை அடி இடைவெளி விட்டும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினம் வருவதையொட்டி வஉசி மைதானத்தில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அத்தோடு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க