• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டி

December 8, 2024 தண்டோரா குழு

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை,மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் கோயமுத்தூர் கோல்ப் கிளப்புடன் இணைந்து சாரிட்டி கோப்பைக்கான கோல்ஃப் போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாவது சீசனாக செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 96 கோல்ப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர்.

இது குறித்த செய்தாளர்களிடம் செஷாயர் அறக்கட்டளை துணை தலைவர் வி.ஆர்.நரேன்,கோயமுத்தூர் கோல்ஃப் கிளப் தலைவர் கோபிநாத்,செயலாளர் துரைராஜ்,கேப்டன் அஷ்வின் சந்திரன்,செஷாயர் அறக்கட்டளை பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்து,அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி இரண்டாவது ஆண்டாக கோவையில் நடைபெறுவதாகவும்,இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க