• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

May 14, 2018 தண்டோரா குழு

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.

தனியார் விளையாட்டு மையம் சார்பில் கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில்,கோவை,சென்னை,கன்யாகுமரி,மதுரை,தேனி, சேலம்,விருதுநகர்,நாகப்பட்டினம்,திருச்சி என 14மாவட்டங்களை சேர்ந்த குழுக்கள் பங்கேற்றுள்ளன.

அமர்ந்து விளையாடும் கைப்பந்து,கால்பந்து போட்டிகள்,அமர்ந்து மற்றும் நின்றபடியாக விளையாடும் குண்டெறிதல்,சதுரங்கம் ஆகிய நான்கு போட்டிகளில் 16 வயதிற்குட்பட்டவர்கள், அதற்கும் மேல் மற்றும் ஓபன் என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன.

மேலும்,போட்டிகளில் அதிக புள்ளிகள் பெரும் குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனி தனியாக நடைபெறும் போட்டிகளில் 30ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பரிசும்,50ஆயிரம் மதிப்புள்ள கோப்பைகளும்,பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க