• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கம்

December 28, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை கலெக்டர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:

இக்கண்காட்சி இன்று முதல் 15 தினங்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 60 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வடிவமைப்புகளில் கோவை கோரா காட்டன், காட்டன் மென்பட்டு சேலை, சுத்த பட்டு சேலை ரகங்கள், நெகமம் காட்டன் சேலைகள், சென்னிமலை பெட்சீட்கள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டு ரகங்கள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் தமிழக அரசின் 30 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.
தற்போது இக்கண்காட்சியில் ரூ.100 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் டெக்ஸ்டைல் கமிட்டி வேணுகோபால், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மேலாளர் ரத்தினவேல், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் குமரேசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் சிவக்குமார், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அப்துல் பார்க் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க