• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாணவர்களின் அறிவியல் அறிவை வெளிக்கொணரும் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி தொடக்கம்

February 21, 2019 தண்டோரா குழு

மும்பையை சேர்ந்த ஜஜடி இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய ரோபோட்டிஸ் செயல்மாதிரிகள் வடிவங்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில், மும்பையை சேர்ந்த இயென்ட்ரா ஆய்வக நிறுவனம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் இறுதி போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாணவர்களின் பதினான்கு ரோபோட்டிக்ஸ் செயல்மாதிரிகளின் வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இன்று தொடங்கிய இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அறிவியல் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். சுமாராக, 70 மாணவர்களின் ரொபோடிக்ஸ் கண்டுபிடிப்புகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், ஐ.ஐ.டி மும்பையில் அவர்களது புதிய கண்டுபிடிப்பு செயல் வடிவத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து ஐயன்ட்ரா முதன்மை செயல் அலுவலர் டாக்டர். சசிகலா கூறுகையில்,

” இது மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்கும் முயற்சி. குறிப்பாக, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியின், தொடக்க விழாவில் கல்லூரி செயலர் கீதா பத்மநாபன், இயக்குனர் ராதாமணி, கணினி அறிவியல் துறை முதல்வர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க