February 25, 2019
தண்டோரா குழு
கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலை கழிவுகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் , விவசாயிகளும் , பொதுமக்களும் , கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாசு கலங்கிய தண்ணீரை எடுத்து வந்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
கோவையை அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து , நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் , அப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி , விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கழிவு நீர் கலங்கிய தண்ணீரை கால்நடைகள் குடித்ததால் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் நோய்யினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலங்கிய தண்ணீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.