• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மலக்குழி மரணங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – புதிய மாவட்ட ஆட்சியர்

February 18, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மலக்குழி மரணங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஹரிஹரன் தமிழ்நாடு நகர்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக திருச்சி ஆட்சியர் ராஜாமணி நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னாள் ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில் பங்கேற்கவில்லை என விவசாயிகள் தெரிவித்திருந்தது குறித்து கேட்ட போது அனைத்து துறை குறைதீர்ப்பு கூட்டங்களிலும் ஆட்சியர் என்ற முறையில் தான் நிச்சயம் பங்கேற்பேன்.மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது குறித்து கேட்ட போது அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க