• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மயக்க ஊசி செலுத்தி காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி

December 18, 2018 தண்டோரா குழு

கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த காட்டுயானை வினாயகனுக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி ஜேசிபி உதவியுடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் தொடர்ச்சியாக சுற்றிவந்தன. இரு காட்டு யானைகளை சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டு கிராம மக்கள் அழைத்து வந்தனர். தனித்தனியாக சுற்றி திரியும் இந்த இரு காட்டு யானைகளும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த்தால் இந்த இரு யானைகளையும் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இரு காட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடந்த மாதம் உத்தரவிட்டார். யானையை பிடிக்க ஆட்சியர் உத்திரவிட்டும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்றைய தினம் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை கோவை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு காட்டு யானைகளையும் உடனடியாக பிடிக்கும்படி வனத்துறையினருக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியினை வனத்துறையினர் துவங்கினர். பெரிய தடாகம் அருகில் மலை அடிவாரத்தில் இருந்த விநாயகன் என்ற காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். இதனையடுத்து காட்டு யானை மயக்கமடைந்தது.

வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து மயக்கம் அடைந்திருக்கும் காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றுவதற்கான பணியினை வனத்துறையினர் துவங்கியுள்ளனர். இந்த யானையை லாரியில் ஏற்றி முதுமலை வனப்பகுதியில் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்

மேலும் படிக்க