October 23, 2019
ரயில் நிலையங்கள் மற்றும் விரைவு ரயில்களை தனியார் மயமாக்கும் உத்திரவை ரத்து செய்யக்கோரி , அதன் நகலை எரித்து , மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள 50 முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கமிட்டி அமைத்தது. அதன்படி நிதி ஆயோக்கின் முதன்மை செயல் அதிகாரி அமிதாப்காந்த் தலைமையிலான கமிட்டி கடந்த 10 ஆம் தேதி தனியாரிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கி உத்திரவை பிறப்பித்தது. இந்த உத்திரவை கண்டித்து எஸ் ஆர் எம் யூ மற்றும் ஏ ஐ ஆர் எப் தொழிலாளர்கள் கூட்செட் ரோடு ரயில்வே பணிமனை முன்பாக , கருப்பு ஆடை மற்றும் பேட்ஜ் அணிந்து , ,மத்திய அரசை கண்டித்து , ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் உத்திரவு நகலை எரித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை , தனியாரிடம் ஒப்படைப் பதற்காக 33 வருட சர்வீஸ் முடிந்தவர்களுக்கு ஒய்வுக்கு முன்பே கட்டாய ஒய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரினர். பணி அனுபவம் பெற்ற ஊழியர்களை திறமையற்றவர்கள் எனக்கூறுவதை கண்டித்தும் , ரயில்வே துறையை ஐ ஆர் ஆர் எஸ் சி என்ற கார்ப்பரேஷனின் கீழ் கொண்டு வந்து தனியார் வசமாவதை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். பணியாளர்களுக்கு உரிய இடமாறுதல் அளித்து, நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றும் சதிதிட்டத்தை நிறுத்தக்கோரி நகல் எரிப்பு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.1