கோவையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ராமசெட்டிபாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (22) மெக்கானிக் நின்று கொண்டு இருந்தார். அங்கே வந்த ஒருவர் தங்களிடம் அழகான பெண்கள் உள்ளனர். 2000 ஆயிரம் கொடுத்தால் மஜாஜ் செய்து உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி தொண்டாமுத்தூர் ரோடு ஐயாசாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பிராகஷ்ராஜை அழைத்து சென்று உள்ளார். அங்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் நிற்பதை பார்த்து வெளியே ஒடிவந்து விட்டார் . உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் அங்கு சங்கீதா (35) கோலம்பாக்கம் வண்டலூர் சென்னை , ஜெயவேல் (35) வண்டலூர் சென்னை , வினோத் (33) பவளத்தம்பாளையம் ஈரோடு , சித்தார்த் (25) வெங்கடேஷ் நகர் கவுண்டம்பாளையம் , ஹரிகிருஷ்ணன் (25) ராமகிருஷ்ணா நகர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் மடக்கிப்பிடித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்