• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போலீசார் அதிரடி சோதனையில் 801 மதுபாட்டில்கள் பறிமுதல்

January 17, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.இதை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 230க்கும் மேற்பட்ட டாஸ்மாக் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து மது விற்பனையில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 269 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் பேரூரில் 4 வழக்குள் 51 மது பாட்டில்கள், கே.எம்.பட்டியில் 12 வழக்குகள் 81 மது பாட்டில்கள்,பொள்ளாச்சியில் 15 வழக்குகள், 217 மது பாட்டில்கள்,வால்பாறையில் 8 வழக்குகள் 92 மதுபாட்டில்கள், மேட்டுப்பாளையத்தில் 10 வழக்குகள் 91 மது பாட்டில் என மொத்தம் 62 வழக்குகளில் 801 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க