• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையர்

July 23, 2020 தண்டோரா குழு

கோவையில் சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரஸ் காவலர்களையும் விட்டு வைக்கவில்லை.
கோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர், உக்கடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை ஆகிய காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவலர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காவல் நிலையங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.கோவை சரவணம்பட்டி, செல்வபுரம் காவல் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கலந்து கொண்டு காவலர்களுக்கு முகக்கவசம், சாணிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் காவலர்களிடம் பேசுகையில்,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பணியில் உள்ள காவலர்கள், முகக்கவசம், கையுறைகளை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க