• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

January 5, 2022 தண்டோரா குழு

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.மிரட்டல் விடுத்த அழைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, உக்கடம் குளமும் வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூரை சேர்ந்த பீர்முகமது என்பதும், அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
பீர்முகமதுவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளிலும் மெரினா கடற்கரை உட்பட இடங்களில் இதேபோன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க