• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்த இந்து மக்கள் கட்சியினர்

August 22, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்து அமைப்புகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் காரணமாக கோவையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் பூசணிக்காயில் கொரானா வைரஸ் உருவம் பொறிக்கப்பட்டு அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கோவையில் 32 தனியார் இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும். சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க