கோவையில் பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கோவை கணபதி பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் காளிமுத்து 45. இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைகளை கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுனரான காளிமுத்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து, அந்த பெண் காளிமுத்துவிடம் கேட்டபோது அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.பின்னர் இது குறித்து அந்த பெண் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்குப் பின் காளிமுத்துவை கைது செய்தனர்.
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு