• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு – தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை

September 24, 2022 தண்டோரா குழு

கடந்த இரு நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இதையடுத்து, கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ,மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க