• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதிய அரசு பேருந்து

January 11, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தடாகம் பகுதி இந்திரா நகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்திற்குள்ளனது.

கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது சின்னதடாகம் இந்திரா நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பாலத்தில் திரும்பும் போது ஓட்டுநர் பிரேக்கை செலுத்தியுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் பேருந்தை விட்டு குதித்துள்ளார்.ஓட்டுனர் இல்லா பேருந்து மரத்தில் மோதி சற்று திரும்பியதில் மண்ணின் இடித்து நின்றதாகவும் கூறப்படுகிறது.

விபத்திற்குள்ளான பேருந்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 15க்கும் குறைவான பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். முதலுதவிக்காக பேருந்தின் ஓட்டுநர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரேக் பிடிக்காத பேருந்தால் விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க