• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா

August 24, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது. கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 392 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யான் ஜூவல்லர்ஸ் நகை கடை பணியாளர்கள் 58 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.தொடர்ந்து, அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டு, அதன் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில்,காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உள்ள தொழிலாளருக்கு தொற்று உறுதியானது.இதனால் அங்குள்ள மற்ற தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது.கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க