• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரபல அலைபேசி விற்பனை உரிமையாளருக்கு கொரோனா தொற்று

June 22, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.முக கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் சமூக் இடைவெளியை பின்பற்றாதவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் வணிக ரீதியிகான தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரணா தொற்று எண்ணிக்கை ஏற்பட்டு விடுமோ அச்சம் எழுந்துள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகை கடைக்கு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டது. மேலும் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தொலைபேசி விற்பனை கடையின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடைகளுக்கு வந்தவர்களின் பட்டியலை சுகாதார துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் வசிக்கும் நான்காவது வீதியில் தடுப்புகள் அமைக்கபட்டு உள்ளது. இதேபோல் 11வது வீதியிலும் தடுப்புகள் அமைக்கபட்டு உள்ளது. கோவையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு உள்ள நிலையில் கொரணா தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கபட்டு பாதுகாப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க