கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் திட்டத்தின் கீழ் பணம் வாங்கி தருவதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வயதான பெண்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் வாங்கித் தருவதாகவும் அதற்கு அணிந்திருக்கும் நகைகளை எல்லாம் கலட்டி வைத்தால்தான் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலபேரிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து பலமுறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது புகாரின் பேரில் பல நாட்களாக விசாரணை நடத்தி வந்த பந்தய சாலை காவல்துறையினர் இன்று அந்த கொள்ளையனை கையும் களவுமாக கோவை அரசு மருத்துவமனையில் பிடித்தனர்.
அவனிடமிருந்து 8 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அவனிடம் விசாரணை நடத்துகையில் அவன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் என்பதும் கோவை மட்டுமின்றி கள்ளக்குறிச்சி பழனி சென்னை ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல இடங்களில் இதே போன்று கொள்ளையடித்து உள்ளதும் அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவனை சிறையில் அடைத்தனர்.
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட
கோவையில் தனது 19வது ஆலையை தொடங்கும் ZF குழுமம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி