• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து பீரங்கி குண்டு கண்டெடுப்பு

July 18, 2019 தண்டோரா குழு

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து இராணுவத்தில் பயன் படுத்தும் பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு 30 ஆண்டுகளுக்கு முந்தயது என்பதும் தெரிய வந்துள்ளது.

கோவை ராம்நகர் பகுதியில் நேற்று அதிகாலை தங்க நகைகடை அதிபத் லிஜோ சுங்கத் என்பவர் வீட்டின் அருகே இருந்த சந்தனமரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.அப்போது காவலாளி சப்தம் போடவே சந்தனமரத்தை போட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஒடியது.இது குறித்து விசாரிக்க கோவை காட்டூர் காவல்நிலைய காவல்துறையினர் அங்கு சென்ற ஆய்வு செய்தனர். அப்போது , அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் ஆய்வு செய்தனர். ராம்ஜி என்பவருக்கு சொந்தமான அந்த பாழடைந்த வீட்டினை சோதனையிட்ட போது பீரங்கி குண்டு போன்ற வெடிபொருள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் , கண்டெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி குண்டு என்பதும், இது 30 ஆண்டுகளுக்கு முந்தயது என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த குண்டை பறிமுதல் செய்த கோவை மாநகர வெடிகுண்டு செயல் இழக்கும் வைக்கும் பிரிவினர் அதை ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.ராம்ஜி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் வெளியூரில் இருப்பதால், பாழடைந்த நிலையில் உள்ள வீட்டில் யாரும் பல ஆண்டுகளாக வசிக்க வில்லை. பாழடைந்த நிலையில் உள்ள அந்த வீட்டில் இருந்து பீரங்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்ஜியின் உறவினர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றி போது பீரங்கி குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க