March 25, 2019
தண்டோரா குழு
கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் திறந்து வைத்தார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக மத்திய கயிறு வாரிய தலைவராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி கோவை அவினாசி சாலையில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றதை அடுத்து விழாவில் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்