• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாஜக சார்பில் முருகன் வேடமணிந்து வேல் பூஜை

August 10, 2020 தண்டோரா குழு

‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை 6மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வரைந்து பூஜை செய்தனர்.இதன் ஒரு பகுதியாக
பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல், 55 வது வார்டு சின்மயா நகர் மற்றும் குறிஞ்சிமின் நகர் பகுதிகளில் ஷஷ்டி தினத்தன்று வேல் பூஜை, சக்தி கேந்திர பொறுப்பாளர் சௌமியா பிரதீப் இல்லத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மகளிர் அனைவரும் கந்தர் ஷஷ்டி கவச பாராயணம் செய்தனர்.பால், தயிர், குங்குமம், பன்னீர்,சந்தனம் போன்றவற்றை வைத்து வேலுக்கு அபிஷேகம் சிறப்பாக செய்யப்பட்டது. குழந்தைகள் முருகர் வேடம் போட்டு கலந்து கொண்டனர்.கந்தனுக்கு பூஜை ஆரானைகள் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க