• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திக் கோரிக்கை

July 18, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதால் உடனே சாலையை செப்பனிட சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சவுரிபாளையம் சாலையை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 56,65வது வட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய பீளமேடு அவினாசி சாலை,ராதாகிருஷ்ணா மில் சந்திப்பு சாலை முதல் சவுரிப்பாளையம் வரையிலான சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது.இந்த சாலைகள் மூடப்படாததால் சாலை குண்டும்,குழியுமாக மாறியதுடன்,கடந்த சில நாட்களாக கோவையில் தொடர் மழை பெய்து வருவதால் முழுவதுமாக மண் சாலையாக மாறி வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லையென்றும், கடந்த 2009ம் ஆண்டு ரூ. 400 கோடி மதிப்பில் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் 10 ஆண்டுகளாகியும் பணிகள் முடிக்காமல்,ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருதாக குற்றச்சாட்டினார்.மேலும்,தொடர்ந்து மாநகராட்சி சாலையை சீரமைக்காமல் இருந்தால்,திமுகவின் தோழைமை கட்சிகளுடன் இணைந்து அனைத்துக்கட்சி சார்பில் மிகப்பெரிய மாநகராட்சி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

மேலும் படிக்க