• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளியின் தனியார் வாகனம் கவிழ்ந்து விபத்து

October 25, 2019

கோவை தடாகம் பகுதி ராகவேந்திரா நகரில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளியின் தனியார் வாகனம் கவிழந்தது.

20 பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் வாகனம் ராகவேந்திரா நகர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஓட்டுனரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் மாணவர்களுக்கு பெரும் சேதாரம் இல்லாமல் தப்பினர். அப்பகுதி மக்கள் அப்பகுதியில் சாலை வசதி இல்லாததே இதற்கு காரணம் என்றும் பல வருடங்களாக சாலை அமைத்து தர படாமலே அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் கூறினர்.

மேலும் தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதியும் இல்லாததால் இரவில் பாம்புகள் யானைகள் போன்றவற்றின் தொல்லைகள் இருப்பதால் வெளியில் வருவதற்கும் அச்சமாக உள்ளது என்று தெரிவித்தனர். இது பற்றி பல முறை மனுக்கள் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினர். அப்பகுதி மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள குன்றுப் பெருமாள் கோவில், திருவள்ளுவர் நகர் ஊர்களிலும் சாலை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க