• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு ஆர்ப்பாட்டம்

August 8, 2020 தண்டோரா குழு

கோவையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்றது.20 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கக்கூடாது, வேலை நேரத்தைப் 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, மின்சார நிறுத்த சட்டத்தை கைவிட வேண்டும் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை 2020 நிறைவேற்றக் கூடாது, கரோனா தாக்கத்தை மையமாக வைத்து நிலக்கரி சுரங்கங்கள் விண்வெளி அறிவியல் வங்கி இரயில்வே போன்றவற்றை தனியாருக்கு விற்கக் கூடாது வேலைநீக்கம் சம்பள குறைப்பு போன்றவற்றை கைவிட வேண்டும், போதும் அடக்க காலத்திற்கும் முழு சம்பளத்தை வழங்கிட வேண்டும் வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கக் கூடாது வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இடாத குடும்பங்களுக்கு மார்ச் முதல் ஜூலை வரை மாதத்திற்கு தல 7,500 ரூபாய் வீதம் 37 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளத்தையே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும். மின்வாரியம் பால்வளம் போக்குவரத்து வங்கி அரசுப் பணி ரயில்வே உள்ளிட்ட துறைகளில் நோய் தொற்றினால் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகையும் மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க