• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டு ஏர்கன் பறிமுதல்

March 28, 2019

கோவை வடவள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ரங்கசாமி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வண்டியில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டி ஏர்கன்கள் இருந்தன.

அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர்கன்கள் இரண்டும் உரிமம் பெறப்படாதவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க