• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

June 28, 2019 தண்டோரா குழு

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற 54 வயது பெண் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அவினாசி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டிருந்தார். ரத்த பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததையடுத்து நேற்று இரவு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரத்தில் அவர் உயிரிழநதார்.

ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அப்பெண் பாதிக்கப்பட்டிருந்ததால் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க