November 3, 2018 தண்டோரா குழு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” திட்டத்தை இன்று கோவை அரசு மருத்துவமணையில் மாவட்டத்தலைவர் அப்துல் நாசர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் இருந்த 150க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கோவை இத்திட்டம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் S.காஜா உசேன், மாவட்டத்துனைத்தலைவர் U.ஹபிபுல்லாஹ், சமூக சேவை அணி செயலாளர் N.முஹம்மது சுல்தான் மற்றும் I. ஃபைரேஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.