• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தைப்பூச அன்னதானம்

January 28, 2021 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தைப்பூச அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானுக்கு உகந்த திருநாளான தைப்பூச விழா தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் அன்னதான விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.அதன் படி கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் தைப்பூச திருவிழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.

மாச்சம்பாளையம் அருள் மிக மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் மருதாசலம் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணை செய்து பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது.மூன்று தலைமுறைகளாக சுமார் நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று மகா அன்னதானத்தில் சுந்தராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தை திருமதி சுசீலா மருதாசலம், மனோண்மணி,மற்றும் செங்கதிர் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் படிக்க