• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி ! – மூன்று நீதிமன்றங்கள் மூடல்

July 7, 2020 தண்டோரா குழு

கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் கடந்த மூன்று மாதங்களுகும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு, வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் காணொளி காட்சி வாயிலாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்,கோவை நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி ஒருவரின் உறவினர் அயல்நாட்டிலிருந்து வந்திருந்த நிலையில் அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,பாதிக்கபட்ட நபருடன் தொடர்பில் இருந்த நீதிபதி உட்பட அவருடன்தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.மூன்று நீதிபதிகள் மற்றும் ஒரு பணியாளர் என நான்கு பேருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு நீதிபதிக்கு தொற்றானது இன்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தொற்று ஏற்பட்ட நீதிபதியுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகள் உட்பட நீதிமன்ற பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, விரைவு நீதிமன்றம் 1, விரைவு நீதிமன்றம் 2, நடுவர் நீதிமன்றம் 6 ஆகிய மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன. கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன.

மேலும் படிக்க