• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாளை முதல் 5 நாட்கள் செல்போன் கடைகளை அடைக்க முடிவு !

July 28, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு உள்ள அனைத்து செல்போன் கடைகளையும் நாளை முதல் 5 நாட்களுக்கு அடைக்க செல்போன் வியாபாரிகள் சங்கம் செய்துள்ளது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையில், கோவையில் கோவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் செல்போன் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினர்.

இதையடுத்து, நாளை 29.7.20 புதன்கிழமை முதல் 2.8.20 ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு காந்திபுரம் X-Cut ரோடு 1 முதல் 10 ஆம் தேதி வரை கிராஸ் கட் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளையும் மூட காவல்துறை, மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை முதல் ,கோவை காந்திபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து மொபைல் விற்பணையாளர் கடைகளும் 5நாட்கள் ஞாயிறு வரை அடைக்கப்படும். என்று கோவை செல்போன் வியாபாரிகள் மற்றும் பழுது நீக்கும் சங்கங்கள் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க