அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவை வனக்கோட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கரடியை கொள்வதற்காக பழங்கள், கரியில் வெடிகுண்டு தயாரித்து வைப்பதாக வந்த ரகசிய தகவலின்படிபெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கட்டஞ்சி மலையை ஒட்டிய கரடிமலை கிராமத்தில் 4 இடங்களில் 6 வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி வனப்பாதுகாவலர் செந்தில், தினேஷ் ஆகிய இருவர் தலைமையில் வனவர் உட்பட வனத்துறை அலுவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர், காவல்துறையினர் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டுகள் ஏதேனும் பதுங்கி வைக்கப்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது. கரிக்காகவும், பயிர் சேதத்தை தடுப்பதற்காக அவுட்டுக்காயால் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் கொல்லப்படுகின்றன.வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த வாரம் இந்த அவுட்டுக்காயால் பசுமாடு பாதிக்கப்பட்டது பல்வேறு கேள்வி எழுப்பிய நிலையில், வனத்துறையினர்.இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு இந்த அவுட்டுக்காய் தயாரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், தயாரிப்பை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட