• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களால் பொது மக்கள் பீதி

July 24, 2020 தண்டோரா குழு

கோவை இருகூர் தீபம் நகர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சட்டையின்றி கையில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடம் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் கம்பனி ஒன்றில் உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரத்தில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் சிங்காநல்லூர் பகுதியில் குழுவாக வந்த மர்ம நபர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க