July 24, 2020
தண்டோரா குழு
கோவை இருகூர் தீபம் நகர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சட்டையின்றி கையில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடம் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இதே பகுதியில் கம்பனி ஒன்றில் உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரத்தில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் சிங்காநல்லூர் பகுதியில் குழுவாக வந்த மர்ம நபர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.