June 8, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் 19 வயது மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல் தளமானது மூடப்பட்டது.இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 5ம் தேதி அன்று திருப்பூரில் இருந்து வந்துள்ளார். இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இன்று வெளியாயின. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தங்கியிருந்த செவிலியர் விடுதி தளமானது மூடப்பட்டது. அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாணவர்கள் இருக்கும் அறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அவருடன் இருந்த 40 செவிலிய மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று கோவை அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி வார்டில் பணிபுரியும் ஊழியர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.