• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நர்சிங் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

June 8, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் 19 வயது மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல் தளமானது மூடப்பட்டது.இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 5ம் தேதி அன்று திருப்பூரில் இருந்து வந்துள்ளார். இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இன்று வெளியாயின. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தங்கியிருந்த செவிலியர் விடுதி தளமானது மூடப்பட்டது. அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாணவர்கள் இருக்கும் அறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அவருடன் இருந்த 40 செவிலிய மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி வார்டில் பணிபுரியும் ஊழியர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க