March 22, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்ட நரிகுறவர்கள்,நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இன்று(மார்ச் 22) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும் நரிகுறவர் மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களை போலீசார் சாலைகளில் வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டுவதாகவும்,தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி போலீசார் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாட்டையால் அடித்தும் கைகளை பிளேடால் கீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும்,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது தங்களை வணிக வளாகங்களில் வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நரிகுறவர் மக்களை,பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.