கோவை மாவட்டத்தில், வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக அனைத்து சாலைகளிலும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது, இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், 65கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டபட்டு வருகின்றது.பொதுவாகவே மேட்டுப்பாளையம் சாலை, காலை, மாலை வேலைகளில் சற்று பரபரப்பாக கானபடும், இந்த நிலையில் மேம்பால பணிகள் வேறு நடைபெற்று வருகின்ற காரணமாக வாகன நெரிசல் அதிக அளவில் காணபட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை வாகன நெரிசலில் சிக்கி தவித்த அவசர ஊர்தி வாகனம் ஒன்று செல்ல வழியின்றி திக்குமுக்காடியது அனைவரையும் சற்று பதற வ வைத்துள்ளது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக, சாலை ஓரங்களில் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்கி அவசர ஊர்தி செல்ல வழி அமைத்து தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தினம் தினம் பல்வேறு, சோதனை களுக்கு உள்ளாகி வருகின்ற கவுண்டம்பாளையம் பகுதியின் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட்டால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் நிலை உள்ளது எனவே இந்த பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த சாலையை பயண்படுத்தும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு